1978 ஆம் வருடத்திய 44 ஆவது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் குடியரசுத் தலைவர் தேச நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த எதன் ஆலோசனையை ஏற்று செயல்பட வேண்டும்?
1978 ஆம் வருடத்திய 44 ஆவது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் குடியரசுத் தலைவர் தேச நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த யூனியன் கேபினெட்டின் ஆலோசனையை ஏற்று செயல்பட வேண்டும். இங்கு அறிந்து கொள்ள வேண்டியது, நெருக்கடி நிலை - அவசரகால பிரகடனம் (Indian Emergency - 25 ஜூன் 1975 – 21 மார்ச் 1977) இந்தியாவில் 21- மாத காலத்திற்கு இந்த நிலை இந்தியக் குடியரசுத் தலைவர்பக்ருதின் அலி அகமது வால், அப்போதைய இந்தியப் பிரதமர்இந்திரா காந்தியின் ஆலோசனை மற்றும் அறிவுறித்தலின் பேரில் இந்திய அரசியலமைப்பு விதி 352ன் படி பிரகடனப் படுத்தப்பட்டது. இது இந்திராகாந்தியின் செல்வாக்கை உயர்த்துவதற்காகவும், அவருக்கு எதிரான நிலையை மக்கள் எடுக்காத நிலையை உருவாக்குதற்காகவும், நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் தேர்தலை சந்திக்க விரும்பாததால் தேர்தலை தள்ளிப்போடும் நோக்கத்திலும், மக்களின் அடிப்படை குடியுரிமை உரிமைகளை பறிக்கும் விதத்திலும், அமல்படுத்தபட்டதாக கூறப்படுகின்றது. இந்தியக் குடியரசு வரலாற்றில் இக்காலம் சர்ச்சை மிகுந்த காலமாக வர்ணிக்கப்படுகின்றது.